இலங்கை

மீண்டும் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தம்

இன்று குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வாராபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலசரக்கு கடை ஒன்றும் வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். ஒரு பெண் உட்பட காயமடைந்த மூவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு மீறினால் பீட்ரூட் கூட ஆபத்து தான்; யாரெல்லாம் சப்பிடக்கூடாது! அளவுக்கு மீறினால் பீட்ரூட் கூட ஆபத்து தான்; யாரெல்லாம் சப்பிடக்கூடாது! அதேவேளை அண்மையில் கொழும்பில் பேருந்தின் மீது பாரிய மரம் விழுந்ததில் ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button