இலங்கை

கோபத்தில் தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசிய அமைச்சர் நாசர்!

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்,

வந்திருக்கும் நிர்வாகிகள் உட்காருவதற்கு நாற்காலிகளை எடுத்து வரும்படி கட்சித் தொண்டர்களிடம் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் இருந்த நிலையில், ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு,

தாமதமும் ஆனதால் தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பி உள்ளார். ‘திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆவடி நாசர் தான் இப்படி செய்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகிறார். கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை.

மக்களை அடிமை போல நடத்துவதுதான் திமுக’ என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

Back to top button