ஏனையவை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் காளான் டிக்கா: எப்படி செய்வது?

காளானில் ஜின்க், காப்பர், மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் காளான் ரத்தசோகைக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

நாம் அன்றாட வாழ்வில் சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா என்று பல விதமான டிக்காகளை சாப்பிட்டிருப்போம். இனி இந்த வித்யாசமான, காளான் டிக்கா செய்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
காளான் – 1 பாக்கெட்
கெட்டித்தயிர் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

கலந்து வைத்த இந்த கலவையில் கழுவி வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடை மிளகாய், பிறகு வெங்காயம், அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கிக் கொள்ளவும்.

பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

தோசைக்கல்லை சூடு செய்து, அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை சேர்த்து அவ்வப்போது திருப்பி போட்டு, 15 நிமிடம் காளான் வெந்தவுடன் எடுத்தால் சுவையான காளான் டிக்கா தயார்.

Back to top button