இலங்கை

முட்டை பனிசுக்குள் போதைப்பொருள் கடத்தல்

பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மாமாவுக்கு நேற்று (13)காலை உணவு கொண்டுவந்த போது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலை உணவுக்காக கொண்டுவந்த முட்டைப் பாணுக்குள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து கொண்டுவந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முட்டை பாண் உள்ளிட்ட உணவுகளை காலை உணவாக மாமாவிடம் கொடுப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாகவும் இவற்றை மாமாவிடம் கொடுக்க வேண்டுமென பொலிஸாரிடம் தெரிவித்த போது அவற்றை பொலிஸார் தீவிரமாக சோதனையிட்டனர்.

முட்டை பாணின் நடுப்பகுதி பிரிக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தினடையே பொலித்தீனால் சுற்றப்பட்ட சுமார் ஐந்து கிராம் நூறு மில்லிகிராம் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வனாத்தமுல்லை பிரதேசத்தை சேர்ந்த பத்தொன்பது வயதுடையவரென தெரியவந்துள்ளது.

Back to top button