இலங்கை

இலங்கையில் புதிய கல்வித்திட்டம் அறிமுகம்: 21வயதில் பட்டப்படிப்பு பூர்த்தி

இலங்கையில் கல்வி அமைச்சினால் புதிதாக முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இலங்கையின் பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு பிள்ளை 17 வயதை அடையும் போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆரம்பக் கல்விக்கான புதிய கருத்துரு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Back to top button