இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை!

பொது நிர்வாக அமைச்சு அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, உரிய விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அல்லது இலங்கையில் தங்க வாய்ப்பு கிடைக்கும். அந்தந்த விடுமுறையை எடுக்கும் போது அவர்களின் வயது மூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Back to top button