இலங்கை

மின்கட்டணம் செலுத்தவில்லை; இருளில் மூழ்கிய பம்பலப்பிட்டி ரயில் நிலையம்

நேற்று முன்தினம் (24) முதல் நிலுவைத் தொகையை செலுத்தாதன் காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்சார கட்டண நிலுவைத் தொகை 877,741 ரூபா எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்சார துண்டிப்பின் காரணமாக குப்பி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அத்துடன் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை எனவும், டிக்கெட் வழங்குவதற்கு குப்பி விளக்குளை பயன்படுத்துவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . அதேவேளை கடந்த 24ஆம் திகதி ரயில்வே திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்ட போதிலும் ரயில் நிலையத்தில் மின்சாரம் இன்று (26) வரை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஊழியர்கள் பெரும் சிரமத்ன் மத்தியில் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

Back to top button