இலங்கை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் உள்ள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும். மீளவும், பெப்ரவரி மாதம் 2ஆம்(02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கபடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படும் குறித்த காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

Back to top button