இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அடிப்படை நிதி ஒதுக்கீடு 2025 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு என்றும், தேவைப்படும் போது தேர்தல் ஆணையத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Back to top button