இலங்கை

கொழும்பில் பால் மா விநியோக நிலையம் ஒன்றை அதிரடியாக சுற்றிவளைத்த அதிகாரிகள்!

கொழும்பு உள்ள புறக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த பால் மா விநியோக நிலையம் ஒன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர். இன்றையதினம் (22-12-2023) புறக்கோட்டை உள்ள மொத்த விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசேட சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 825 கிலோ கிராம் காலாவதியான பால் மா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால் மாவை எடுத்துச் செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Back to top button