இலங்கை

கிளிநொச்சி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலி: சாரதி தப்பி ஓட்டம்

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16-09-2023) இடம் பெற்ற குறித்த விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தினை எதிர்கொண்டள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button