ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

தொழிலில் மேன்மை அடையும் ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 23.02.2024, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று இரவு 08.39 வரை ஆயில்யம். பின்பு மகம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் வேடிக்கையாகப் பேசி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள். இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே சந்திப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமாக கால் பதிக்க மறக்காதீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பீர்கள். போட்டி பந்தயங்களில் தோல்வியை சந்திப்பீர்கள்.

ரிஷபம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். பெட்டிக் கடை, டீக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்வீர்கள். காதலியை திருப்தி படுத்த பண உதவி செய்வீர்கள்.

மிதுனம் ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். தொழிலுக்குப் போட்டியாக இருந்தவர்களை வீழ்த்துவீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். இதனால் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து தொழிலுக்குத் தேவையான பண உதவி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைஅடைய முனைப்புக் காட்டுவீர்கள்.

கடகம் விருந்து நிகழ்ச்சிகளுக்காக கணிசமான காசு செலவழிப்பீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். தாய் மாமன் வழியில் நன்மைகள் அடைவீர்கள். காதலியின் கனிவான பேச்சால் உற்சாகமடைவீர்கள். ஊரும் உறவும் மதிக்கும்படி நடப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான அரசாங்க உதவிகளை பெறுவீர்கள்.

சிம்மம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள். அதனால் பொல்லாப்பில் சிக்குவீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் அடைவீர்கள். வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரித்ததால் மன வேதனைப்படுவீர்கள். போனை எடுக்கவில்லையே என்ற காதலியின் கோபத்தால் உள்ள சோர்வு அடைவீர்கள்.

கன்னி இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி செய்யும் உதவியால் கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். எல்ஐசி துறையில் உள்ளவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பீர்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். அரசாங்க உதவியை தாராளமாக பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு மருத்துவம் பார்த்து நிவாரணம் காண்பீர்கள்.

துலாம் தள்ளாட்டமாக இருந்த தொழிலை நிலை நிறுத்துவீர்கள். கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். இதயத்தில் ஏற்பட்ட வலிக்கு பரிசோதனை செய்து கொள்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றத்தால் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

விருச்சிகம் உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள். டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசாதீர்கள். ரிப்பேரான வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். அரசாங்க வேலையில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். அக்கறையோடு வேலை பார்த்தாலும் கெட்ட பெயரைத் தான் சம்பாதிப்பீர்கள். நண்பரின் உதவியால்வெளிநாடு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

தனுசு கடந்த காலத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவீர்கள். இக்கட்டான நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். அன்புக்குரிய காதலிக்கு சேலை வாங்கி பரிசளிப்பீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

மகரம் நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போவீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள். தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனைப்படுவீர்கள். குடும்ப விவகாரத்தால் மனக்குழப்பம் அடைவீர்கள். அடுத்தவருக்கு அறிவுரை சொல்லி அவதிப்படாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.

கும்பம் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பங்கு பரிவர்த்தனையை சிறப்பாக செய்வீர்கள். தொழில்துறையில் இருந்த போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். அரசுத்துறை வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள். உள்ளம் கவர்ந்த பெண்ணால் உற்சாகமடைவீர்கள்.

மீனம் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள். காலை வார நினைக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.

Back to top button