இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில், பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவரொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கிள் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button