ஆன்மிகம்

நவம்பர் 4 முதல் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா?

வேத ஜோதிடத்தில் சனிக்கு விசேஷ முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சனி பகவான் நீதியின் கடவுள் மற்றும் முடிவுகளை வழங்குபவர் என்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், சனி ராசி மாறினாலோ அல்லது வக்ர பெயர்ச்சி அடைந்தாலோ அல்லது வக்ர நிவர்த்தி அடைந்தாலோ, அது நிச்சயமாக அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்துகின்றது. இந்நிலையில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். மேலும் அடுத்த 30 ஜூன் 2024 வரை இதே நிலையில் தான் சனி பயணிப்பார். சனியின் சஞ்சாரம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும்.அந்தவகையில் இந்த மாற்றத்தினால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனியின் நேரடி சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களிடம் பணப்புலக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையிலும் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

சனி நேரடியாக இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு பெரியளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் பல அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

நவம்பர் 4-ம் தேதி முதல் மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் முயற்சி செய்தாலே வெற்றி கிடைக்கும். உங்கள் நிதி நிலையும் சீராக அமையும்.

எதிர்பாராத பண வரவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏதேனும் சட்ட தகராறுகள் நிலுவையில் இருந்தால் அது உங்கள் பக்கம் சார்பாக முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை சீராகும். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும்.

பணம் சம்பந்தமான எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும் இக்காலத்தில் நிலம், வாகனம் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். இது எதிர்பாராத பண வரவுகளை கொடுக்கும்.இந்தப் பெயர்ச்சியால் மூதாதையர் சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாற்றப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் மகர ராசிகாரர்களுக்கு இது பொற்காலமாக அமையும்.

Back to top button