இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை- தேசிய அளவில் முதல் இடம் பிடித்த யாழ் வலயம்!

அண்மையில் வெளியான தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை 3இலட்சத்து 29 ஆயிரத்து 668 ஆகும்.
இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 257 ஆகும்.


வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,
வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17 ஆயிரத்து 622 என்று புள்ளிவிபரம் தெரிக்கின்றது.


வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில்
யாழ். கல்வி வலயம் 25.37% பெற்று முதல் இடத்தினைப் பெற்றுள்ளது.

Back to top button