ஏனையவை

கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்

பொதுவாக பெரும்பாலான மனிதர்களுக்கு கடன் இருக்கத்தான் செய்யும், இப்படி கடன் வர காரணம் நாம் எமது வாழ்கையில் பின்பற்றாத சில விடயங்கள் தான்.

இதிலிருந்து மீண்டு உங்கள் கனவுகள் சாத்தியமாக நீங்கள் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அந்த விடயங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என கணக்கெடுக்க வேண்டும், கடனால் வட்டி செலுத்தினால் அது உங்கள் வருமானத்தில் இருந்து எவ்வளவு பாதிப்பு என்பதை தீர்மானிக்க வேண்டும் .

உங்களுக்கு வருகின்ற வருமானத்தில் இருந்து செலவுக்கான ஒரு பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும், இந்த திட்ட செயற்பட்டால் கடன்களை குறைக்க வாய்ப்பு உள்ளது.

வருமானத்தை விட நாம் செலவு செய்ய கூடாது, நமது தேவைக்கு மட்டும் வருமானத்திற்குள் செலவு செய்ய வேண்டும்.

இப்போது உங்களுக்கு இருக்கும் வருமானம் போதியளவு இல்லை என்ற பட்சத்தில் புதிய வருமானம் ஈட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் இதற்கு கூடிய நேரம் வேலை செய்யலாம்.

உங்கள் கடன்களை அடைக்க உதவும் நிதித் திட்டங்களைப் பயன்படுத்தவும், நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம்.

இவற்றை நீங்கள் பின்பற்றுவதால் உங்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு உங்கள் பணத்தை உங்களுடன் வைத்து கொள்ளலாம்.

Back to top button