உடல்நலம்

உடலில் இரும்புசத்து அதிகரிக்கும் முருங்கைகீரை சூப்: செய்முறை இதோ!

முருங்கைக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக் கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து விடும். மருத்துவ குணம் அதிகம் காணப்படும் மரங்ககளில் முருங்கையும் ஒன்று.முருங்கை இலைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுகளில் சேர்த்து சாப்பிடவேண்டும். அவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளன.முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின் மற்றும் மினரல்கள் மிகுந்து காணப்படுகிறது. மருத்துவகுணங்கள் நிறைந்த மற்றும் உடலுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்க யூத முருங்கை கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 5
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்

செய்முறை

முருங்கை இலையில் உள்ள காம்புகளை நீக்கி அவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அலசிக் கொள்ள வேண்டும்.

இப்போது, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சூடாகிய பின்னர், அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும்.

அத்துடன் முன்னர் ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

முருங்கை இலை கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்போது அவை சேர்ந்து நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடதிற்கு சுண்ட காய்ச்சவும்.

2 டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

காரம் அதிகம் சேர்ப்பர்வர்களாக இருந்தால், கூடுதலாக மிளகுத் தூள், வெள்ளைப் பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.

Back to top button