இலங்கை

இனிவரும் காலத்தில் முன்னறிவிப்பின்றி வெளியேறுவோர் மீது கடும் தீர்மானம்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் எம்பிலிப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் வைத்தியசாலையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (05) தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார். Hospital கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Back to top button