இலங்கை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக திருகோணமலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 13, 2023

திருகோணமலை மீனவர்கள் இன்று சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-சிறிமாபுரவிலிருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள், திருகோணமலை நகரம் ஊடாக மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணித்தியாலங்கள் கண்டி-திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மீனவர்கள் கூறுகையில், சட்டவிரோத மீன்பிடி முறைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Back to top button