இலங்கை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்: பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகம்

யாழில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த போது ஹயஸ் ரக வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு மருதனார்மடம் நோக்கி தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் நிலையம் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினரை துரத்திச்சென்ற போதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த போது ஹயஸ் ரக வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு மருதனார்மடம் நோக்கி தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் நிலையம் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினரை துரத்திச்சென்ற போதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button