இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தடை விவகாரம் குறித்து விசாரணை நீதிபதி எடுத்த திடீர் முடிவு

இன்று (14) இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான அதிபரின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து தாம் விலகுவதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதனால் குறித்த விசாரணையை வேறு நீதியரசர் குழுவொன்றிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button