ஆன்மிகம்

வீட்டில் நிலவும் பணக்கஷ்டத்திலிருந்து மீள பச்சை மிளகாயினால் நடக்கும் அதிசயம்!

பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாயில் வீட்டு பிரச்சினைகளை தீர்க்க எளிய மந்திரங்களை பின்பற்றுவது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கின்றது.. ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி ஜோதிட ரீதியாகவும் பச்சை மிளகாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பச்சை மிளகாய் கண் திருஷ்டி நீக்குவது முதல் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவது வரை செயல்படுகிறது. புதன் கிரகத்தை குறிக்கும் பச்சை மிளகாய் எவ்வாறு அனைத்து பிரச்சினையும் தீர்க்கின்றது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பரிகாரம் என்ன?

கண் திருஷ்டி ஒருவரின் வாழ்க்கையில் சிக்கல்களை அதிகமாக ஏற்படுத்துகின்றது. கண்திருஷ்டியைப் போக்க 7 பச்சை மிளகாயை கண் திருஷ்டிபட்ட நபரின் தலையில் 7 முறை தலைகீழாகவும் நேராகவும் சுற்றி இறுதியில் சாலையின் ஓரத்தில் வீசிவிட வேண்டும்.

வீட்டில் பணப்பிரச்சினை தீர்க்க 3 மிளகாயை பர்ஸில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்… பச்சை மிளகாய் காய்ந்ததும் அதனை மீண்டும் மாற்றி பர்ஸில் வைப்பதால் பணம் தங்கும்.

இதே போன்று வாஸ்து குறைபாடை சரி செய்வதற்கு, தினமும் காலையில் ஒரு கிளாசில் புதிய பச்சை மிளகாய் ஒன்றினை போட்டு வைக்கவும். பின்பு இரவில் தண்ணீருடன் சேர்த்து மிளகாயையும் வெளியே ஊற்றிவிட வேண்டும். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தால் வாஸ்து தோஷம் குறையுமாம்.

ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பவர்கள் தலையணை அடியில் 5 பச்சை மிளகாயை வைத்து தூங்க வேண்டும். மிளகாய் காய்ந்து விட்டால் மாற்றிக்கொண்டு தொடர்ந்து வைத்து வரவும். இவ்வாறு செய்தால் நோயாளிகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலையிலும் நீங்கள் தடையை சந்தித்தால், நீங்கள் வேலை செய்யும் மேசையில் தினமும் 7 பச்சை மிளகாயை வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் வைக்கும் மிளகாயை யாரும் பார்க்காதவாறு வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் வேலையில் ஏற்படும் தடங்கள் குறைய ஆரம்பமாகும்.

Back to top button