ஆன்மிகம்

ஐப்பசி பௌர்ணமியில் நிகழும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்கும் லட்சுமியின் அருள் கிடைக்குமாம் – 9 ஆண்டுகளுக்கு பின்னான நிகழ்வு

பொதுவாக இந்து மதத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமியான இன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்நாளில் சந்திரனை வழிபடுவதோடு, லட்சுமி தேவியையும் வழிபடுவது நல்ல பலனைத் தரும். அதுவும் இந்த சந்திர கிரகண தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நன்கு காணப்படும். அதில் சிலருக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.

இந்த ஆண்டின் ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் வருகிறது. இதற்கு முன் இந்த மாதிரியான நிகழ்வு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அதாவது ஐப்பசி பௌர்ணமி சந்திர கிரகணமானது அக்டோபர் 8, 2014 ஆம் தேதி நிகழ்ந்தது.

இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மேஷ ராசியில் உள்ளார். அதோடு இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகியுள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நன்மைகளைத் தரும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பேச்சால் பலரை மயக்குவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பலனைத் தரும். சிலருக்கு திடீர் பண வரவு கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் நன்றாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். பணியிடத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில் வெற்றி காண்பார்கள். வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். லட்சுமி தேவியின் அருளால் பணப் பிரச்சனைகள் நீங்கும்.

Back to top button