ஆன்மிகம்

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்… யார் யார்னு தெரியுமா?

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்து சாஸ்திரத்தின்படி சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

ஜோதிடத்தின்படி, சனி பகவான் நீதியின் கடவுள், அவர் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும்போது அவற்றின் எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அந்த வகையில் சனிபகவான் 2024 இல் மூன்று முறை திசை மாறுவார். பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் மார்ச் 18ஆம் திகதி வரை சனிபகவான் உறக்கநிலையில் இருப்பார் ஆகவே இந்த நாட்களில் எந்த ராசியினருக்கும் சனிபகவானால் பாதிப்புக்கள் ஏற்படாது.

எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி உதயமாகும் சனியால், பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு சனிபகவான் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவார். இந்த ஆண்டு சனி தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.

உங்களின் வாழ்க்கையில் அதிக பணம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மரியாதை மேம்படும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். இந்த ஆண்டு நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு பல நன்மைகளை சனிபகவான் கொடுப்பார். உங்களை தேடி வாய்ப்புகள் அடுத்தடுத்து வர மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவிப்பீர்கள்.

வீடு மாற்றம் இட மாற்றம் என்பன உண்டாகும்.பல வழிகளிலும் இருந்து பணம் கிடைக்கும்.

கடகம்

இந்த ராசியினருக்கு 2024-ல் சனி நல்ல பலன்களையே சனிபகவான் தருவார். சனியின் மாற்றத்தால் உங்களின் பொருளாதார நிலை விரைவாக உயரும்.

நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு வாய்ப்பு இலகுவில் கிடைக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக அமையும்.

Back to top button