ஏனையவை

இந்த ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் வல்லவர்களாம்! யார் யார்னு தெரியுமா?

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் ஏதாவது ஒரு சில விடயங்களுக்கு பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். எந்த பொய்யும் சொல்லாமல் வாழ்ந்த யாரும் இயல்பு வாழ்க்கையில் இருக்கவே முடியாது. ஆனால் சில பேர் பொய் சொல்வதையே வாழ்வியல் கலையாக கொண்டிருப்பார்கள். அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிகமாக பொய் சொல்லக்கூடிய 5 ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வசீகரமான மற்றும் நகைச்சுவையான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். எனினும் 12 ராசிகளில் மிகப்பெரிய பொய்காரர்களாக மிதுன ராசியினர் காணப்படுகின்றார்கள். ஆனாலும் அவர்கள் சொல்லும் பொய் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காது. அதனால் அவர்களை யாரும் தவறாக நினைக்க வேண்டிய நிலை ஏற்படாது.

துலாம் சுக்கிரனால் ஆளப்படும் அழகான மற்றும் இராஜதந்திரம் நிறைந்த ராசிக்காரர்களாக இருக்கும் துலாம் ராசியினர் அதிக பொய் சொல்லும் ராசியினராக இருக்கின்றனர். தங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை மதிப்பார்கள். எனவே எப்போதாவது அமைதியைப் பேணும் நோக்கில் சிறிய பொய்களை கூறுவார்கள். உதாரணமாக தங்கள் நண்பரின் ஹேர்கட் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அது நன்றாக இருக்கிறது என்று கூறலாம். மோதலை, பிரச்சனைகளை தவிர்க்கவே அவர்கள் பொய் சொல்வார்களாம். ராசிக்காரர்கள் தங்கள் பொய்களை நம்ப வைக்கும் திறமையைக் கொண்டிருந்தாலும், அவர்களின் நோக்கங்கள் பொதுவாக தூய்மையானவை.

சிம்மம் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கார்கள், பெரும்பாலும் மிகைப்படுத்தலின் ராஜா அல்லது ராணியாகக் கருதப்படுகின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் தங்களை சிறப்பாகவோ அல்லது உற்சாகமாகவோ காட்டுவதற்காக உண்மையை மறைக்கும் போக்கைக் கொண்டுள்ளனர். தங்களின் பொய்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் கதையின் ஹீரோவாக மட்டுமே இருக்க விரும்புகிறார்கள்.

தனுசு வியாழனால் ஆளப்படும் சுதந்திரமான நெருப்பு ராசியான தனுசு ராசியினர் கதை சொல்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர். இந்த நபர்கள் பெரும்பாலும் தங்கள் சாகச மற்றும் ஆய்வுக் கதைகளை மிகைப்படுத்துகிறார்கள். அவர்கள் கற்பனையின் சக்தியை அதிகமாக நம்புகிறார்கள். இவர்கள் பொய்யாக விடயங்களை கற்பனை செய்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

மீனம் ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்க்க அல்லது அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வைப் பேண மீன ராசிக்காரர்கள் பொய்களைச் சொல்லலாம். வீட்டில் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கனுமா? குபேர பொம்மையை இந்த இடத்தில் வைங்க வீட்டில் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கனுமா? குபேர பொம்மையை இந்த இடத்தில் வைங்க இந்த மென்மையான ஆன்மாக்கள் சில சமயங்களில் ஒரு சிறிய பொய்யால், தங்களை சுற்றியுள்ள நபர்களின் உணர்வுகளைப் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறார்கள். இருப்பினும்,தாங்கள் சொன்ன பொய்க்காக மீன ராசிக்கார்கள் உடனே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பார்கள்.

Back to top button