உடல்நலம்

குழந்தை பெற்ற தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்

குழந்தை பிறந்த பெண்கள் கண்டிப்பாக தினசரி ஆறு மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் அதிகபட்சமாக 8 மணி நேரம் தூக்கம் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக பல தாய்மார்கள் தூக்கத்தை குறைத்துக் கொள்வார்கள் என்றும் அது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மனச்சோர்வு இருக்கும் என்றும் குழந்தையை தாய் அருகிலேயே தூங்கும்போது குழந்தை எழுந்து விடுமோ என்ற யோசனையிலேயே தாய் சரியாக தூங்க மாட்டார் என்றும் எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்வதோடு தங்களுடைய உடலையும் தாய்மார்கள் கவனித்துக் கொள்ள சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தாய்ப்பால் போதியளவு சுரக்க தாயமார்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Back to top button