உடல்நலம்

முடி உதிர்விலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்: பயன்படுத்துவது எப்படி?

பொதுவாக கொய்யா பழத்தின் இலைகள் தலைமுடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். கொய்யா இலைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இயற்கையான நன்மை கொண்ட கொய்யா இலைகளை தலைமுடிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு கொய்யா இலைகளை பயன்படுத்தும் போது அது அற்புதமான நன்மைகளைத் தருகிறது. மேலும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.

தலைமுடிக்கு கொய்யா இலைகள்
கொய்யா இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பால் தலைமுடி வளர்ச்சியடைவது மட்டுமின்றி அடர்த்தியான தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் தலைமுடி தண்டுகள் மென்மையாகக் கூடும். கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் சி வேர்களை வலிமையாக்குகிறது மற்றும் முடி உதிர்வதைக் குறைக்கிறது.

மேலும் இந்த இலைகள் தலைமுடி மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும்படி எண்ணெய்ப் பசையைத் தடுக்கும். கொய்யா இலைகளின் திரவம் தலைமுடியை கருமையாக்கிடும். நரை முடி மட்டுமின்றி புதிதாக வளரும் முடியை கருமையாகவும், பளபளப்பாகவும் செய்திடும்.
மேலும் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும் போதும் இதைப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை 500 மில்லி தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் குளிர வைக்கவும்.

இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.

முடி உதிர்வை தவிர்க்க அல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்பினால் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இந்த திரவத்தை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.

Back to top button