ஆன்மிகம்

செவ்வாய் பெயர்ச்சியால் யோகத்தை பெறப் போகும் மூன்று ராசியினர்!

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் (27.12.2023) ஆம் தேதி செவ்வாய் குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். தைரியம், வீரம், வலிமையின் காரணியான செவ்வாய் தனுசு ராசியில் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதுவும் இந்த பெயர்ச்சியின் தாக்கமானது 45 நாட்கள் வரை இருப்பதால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பணம் அதிகம் சேரும் மற்றும் வெற்றிகளும் குவியும். இப்போது தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம் மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக, நல்ல பலன்களை அளிப்பதாக இருக்கும். தொழில் ரீதியாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புகளைத் தவிர்க்க வேண்டும்.

துலாம் துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெறக்கூடும்.

தனுசு தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை வலுவடையும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

Back to top button