இலங்கை

யாழ் பல்கலையில் உறவுகளின் கண்ணீருடன் மாவீரர்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி!

யுத்தத்தில் உயீர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் இன்றையதினம் (27-11-2023) யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது. இதன்போது, மாவீரர்கள் நினைவாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Back to top button