உடல்நலம்

கிராமத்து ஸ்டைலில் உடல் ஆரோக்கியத்திற்கு கருப்பு உளுந்து சோறு: தயாரிப்பது எப்படி?

கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பு உளுந்து சோறு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – அரிசி-1 கப், கருப்பு உளுந்து- 1/2 கப், சீரகம்- 2 ஸ்பூன், பூண்டு- 20, கருவேப்பிலை- 1 கொத்து, கொத்தமல்லி- 1 கொத்து, தேங்காய்- 1 கப், பெருங்காயம்- தேவையான அளவு, உப்பு- தேவையான அளவு , நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்

செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து 2 முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து மூடிபோட்டு வேகவைக்கவும். அரிசி மற்றும் கருப்பு உளுந்து பாதி வெந்து வரும் வேலையில் அதில் பூண்டு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். நன்கு வெந்து வந்தபின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறவும். இறுதியாக இதில் நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லியை சேர்த்து கிளறி நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் ஆரோக்கியமான கருப்பு உளுந்து சோறு தயார்.

Back to top button