இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01.12.2023) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பருவமழை படிப்படியாக பெய்து வருகிறது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும். இதன்போது ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Back to top button