இலங்கை

யாழிற்கு கலக்கப்போவது யாரு பாலா வருகை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் யாழ்ப்பானத்திற்கு வருகை தந்துள்ளனர். யாழ் புங்குடுதீவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலா மற்றும் வினோத் யாழிற்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை கடந்த நாட்களிலும் தென்னிந்திய தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் யாழிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button