இன்றைய ராசி பலன்கடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதுலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ரிஷபம்விருச்சிகம்

இன்றைய ராசிபலன் (07.02.2023)

ராசிபலன்

மனதில் உற்சாகம் பெருகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் நாள் . உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வியாபார முயற்சிகளை இன்று மேற்கொள்வது சிறப்பு . சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நன்று . தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு தீரும் . வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள் . சுப்பிரமணிய கடவுளை வழிபட அல்லல்கள் நீங்கும்.

ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரிகளுக்குப் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

ராசிபலன்

உங்கள் முயற்சிகள் சாதகமாக முடியும் நாள் . பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு தீரும் . சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் இறங்கும் முன்பாக உரிய ஆலோசனை தேவை. இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நல்லது .

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக வியாபாரிகளிடம் எச்சரிக்கை தேவை. தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ராசிபலன்

இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரிகளுக்குத் தொழிலை விரிவுபடுத்தத் தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று பிற்பகலுக்குபின் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நீங்கும் நாள் . லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு  செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்தவோ கடையை சொந்த இடத்துக்கு மாற்றவோ நினைத்தால் இன்று அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். மகான் ஷீர்டி சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

ராசிபலன்

இன்று காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

ராசிபலன்

எதிர்பாராத பணவரவு இருந்தாலும்  திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்கு முக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு  உள்ளதால் சற்று பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்குப் பணியாளர்களால் சிறு தொந்தரவு ஏற்பட்டு விலகும். மகா விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

ராசிபலன்

இன்று காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள் . சிலருக்கு சகோதரர்களால் எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும் . வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்குப் பழைய பாக்கிகள் வசூலாகும். விநாயகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

Back to top button