விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் சானியா மிர்ஸா!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டிலிருந்து தொழில்முறை டெனிஸ் போட்டிகளில் பங்குபற்றும் சானியா மிர்ஸா, மகளிர் இரட்டையரில் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையாவார்.

அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள போட்டிகளுடன் தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறவுள்ளதாக சானியா மிர்ஸா அறிவித்துள்ளார்.

36 வயதான சானியா மிர்ஸா, எதிர்ரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவில் கஸக்ஸ்தானின் அனா டேனிலினாவுடன் இணைந்து விளையாடவுள்ளார். அது சானியாவின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button