இலங்கை

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் .

கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப் பயணிகள்  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர் எனவும் இதற்கமைய ரஷ்யாவிலிருந்து 12 ஆயிரத்து 64 சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 838 பேரும், ஜேர்மனியில் இருந்து 3 ஆயிரத்து 945 பேரும், பிரித்தானியாவிலிருந்து 3 ஆயிரத்து 862 பேரும், பிரான்சில் இருந்து 2 ஆயிரத்து 241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இம்மாதம் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Back to top button