இன்றைய ராசி பலன்கடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதுலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ரிஷபம்விருச்சிகம்

இன்றைய ராசிபலன் (05.02.2023)

ராசிபலன்

தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும்.சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்று. தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

ராசிபலன்

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும் நாள் . வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். தொழில் விற்பனை திருப்திகரமாக இருந்தாலும் பணவரவு தாமதமாகும்.

ராசிபலன்

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும் நாள் . வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கல் சுமுகமாக இருக்கும். புதிய முயற்சிகளை திட்டமிடுவீர்ள்.

ராசிபலன்

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வளியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவு ஏற்படும் கணவன் ,மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. உழைப்பைப் பெருக்க வேண்டிய தருணம்.

ராசிபலன்

முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகள் குறித்து நன்கு ஆலோசித்துச் செய்வது நல்லது.

ராசிபலன்

தேவையான பணம் கிடைக்கும் நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசிபலன்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள்எடுப்பதை தவிற்கவும் .பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.

ராசிபலன்

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர் தேடிவருவார். புதிய திட்டங்கள் தீட்ட உகந்த நாள்.

ராசிபலன்

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் செய்யும் இடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டு தீரும்.

ராசிபலன்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவை யற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்குவதை தவிர்க்கவும் . வியாபாரத்தில் வாடிக்கையாளின் பிரச்னைகளைக் கேட்டு அதற்கேற்ப வியாபார உத்திகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

ராசிபலன்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள். வியாபாரிகள் எதிர்பார்த்த ஒப்பந்தம் குறித்த நற்செய்தி கிடைக்கும். பணியாளர்கள் வகையில் அனுசரித்துச் செல்வது நல்லது.

ராசிபலன்

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட் டாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும் பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண் டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். அதிரடி முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

.

Back to top button