விளையாட்டு

பாகிஸ்தான் அறிவிப்பால் உலக கோப்பை தொடர் ரத்தா? பிசிசிஐ அதிர்ச்சி!

இந்தியாவிற்கு வந்து பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு தயங்குகிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதால் பிசிசிஐக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை இன்னும் ஐசிசியால் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே நடந்த அரசியல் யுத்தம்தான். பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடுவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுதிய கடிதத்தில், நாங்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் அது எங்கள் நாட்டின் அரசு கையில் உள்ளது. எங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விளையாட அனுமதிகொடுக்காமலும் போகலாம். இந்தியாவிற்கு வந்து விளையாடுவதில் எங்களுக்கு சிக்கல் இருக்கிறது. அக்டோபர் மாதம் தானே போட்டி நடைபெற உள்ளது. அதற்குள் இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், உலகக்கோப்பை தொடருக்கு 6 மாதத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடுவது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியான தங்களது பதிலை தெரிவித்துள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ குழம்பி வருகிறது. ஒருவேளை பாகிஸ்தான் இத்தொடரிலிருந்து விலகினால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button