ஆன்மிகம்

13 ஆண்டுகளின் பின் பௌர்ணமியோடு உருவாகும் மூன்று யோகங்கள்; அதிர்ஷ்டத்தில் மூழ்கவுள்ள இராசிக்காரர்கள்

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியை விட இன்றைய தினம் (24.02.2024), அதாவது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்துடன் பௌர்ணமி வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த மாசி மாத பௌர்ணமி நாளில் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடுவது மிகவும் நல்லது.

இந்த பௌர்ணமி நாளில் சந்திரனின் தாக்கமானது 12 இராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் இன்றைய தினம் (24.02.2024) பௌர்ணமியானது கன்னி ராசியில் நிகழ்வதோடு ருச்சக யோகம், புதாதித்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி யோகம் ஆகிய 3 யோகங்களும் உருவாகிறது.

இப்படியான 3 யோகங்களும் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இதனால் இந்த யோகங்களால் 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

மேஷம்
மாசி மாத பௌர்ணமியானது மேஷ ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது.

போட்டித் தேர்வுகள் மற்றும் விளையாட்டுக்களில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் அதிகம் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்
மாசி மாத பௌர்ணமியானது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

இந்நாளில் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் உங்களின் வேலைகளை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
மாசி மாத பௌர்ணமி நாளில் சிம்ம ராசிக்காரர்களின் பேச்சில் இனிமை இருக்கும்.

எதற்கும் அவசப்படாமல் மிகவும் பொறுமையாக அனைத்தையும் கையாள்வீர்கள்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இந்த வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

துலாம்
மாசி மாத பௌர்ணமி நாளில் உருவாகும் யோகங்களால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் எதிர்பாராத வகையில் நல்ல பலனைத் தரும்.

மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

Back to top button