விளையாட்டு

நேற்றைய போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

நேற்றையதினம் இடம்பெற்ற இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை வீரர் தில்ஷான் மதுஷங்க நேற்றைய போட்டியில் அவுட்ஃபீல்டில் டைவிங் செய்யும் போது அவரது வலது தோள்பட்டையில் சிறிய சிதைவு ஏற்பட்டுள்ளது, இன்று எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ க்கு அனுப்பப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கைகள் கிடைத்தவுடன், தில்ஷான் மதுஷங்க அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது தொடர்பில் அணி நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய போட்டியில் நாணய சுழற்சிக்கு சற்று முன்னர் பந்து தாக்கியதில் சாமிக்க கருணாரத்ன உதட்டில் காயம் ஏற்பட்டது.

மூன்று தையல்கள் போடும் அளவிற்கு அவரது காயம் இருந்ததாகவும் அணியின் மருத்துவர்களின் ஊழியர்களின் பரிந்துரையின்படி விளையாட்டில் பங்கேற்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button