உடல்நலம்

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது… ஏன்னு தெரியுமா?

பொதுவாகவே பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோய்களைத் தவிர்க்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

பழங்கள் பெரும்பாலும் உணவின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மருத்துவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்களையே பரிந்துறைக்கின்றனர்.

பொதுவாக சில உணவு பொருட்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எந்த பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏன் தண்ணீர் குடிக்க கூடாது
வாழைப்பழம்

வாழைப்பழங்களில் பொட்டாசியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் தண்ணீர் குறித்த வேதிப்பொருட்களுடன் தாக்கமடைந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மாம்பழம்

மாம்பழத்தில் உள்ள என்ஸைம்களால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது.

பப்பாளி

பொதுவாக பப்பாளிப்பழத்தில் பாப்பைன் (papain) எனும் வேதிப்பொருள் காணப்படுகின்றது.இந்த பதார்த்தம் இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும்.

அன்னாசி

அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. இதனால் அன்னாசி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. இப்படி குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை உள்ளது. இது தண்ணீருடன் தாக்கம் புரிந்து நெஞ்செரிச்சல் பிரச்சினைகள் ஏற்படும்.

ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது. இதனை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.

Back to top button