இலங்கை

நாட்டில் கடல் கொந்தளிப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வங்கதேச கடற்கரையை (இலங்கையை விட்டு) நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய கடல்கள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும், மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீன்பிடி படகுகள் அவதானம் இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடா பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவீரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி உட்பட பலர் மாவீரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி உட்பட பலர் இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Back to top button