விளையாட்டு
இலங்கைக்கு 391 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த்திருந்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 166 ஓட்டங்களையும் சுப்மன் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் அணிக்கு 391 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இலங்கை துடுப்பெடுத்தெடுத்தாடிவருகிறது.