இலங்கை

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு:வெளியான அறிவிப்பு

புதிதாக 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. நேர்முகத் தேர்வு நடத்தியன் பின்னர் விரைவில் கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் தோன்றவுள்ளனர்.

Back to top button