விளையாட்டு

மும்பை மருத்துவமனையில் ரிஷப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை

உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். தற்போது அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது.

டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த மருத்துவமனையில் விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.

Back to top button