ஆன்மிகம்

இன்று சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் செல்வ வளம் பெருக விநாயகரை இப்படி வழிபடுங்க

நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

இன்றைய நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை.

விநாயகருக்குரிய திதியாக சதுர்த்தி திதி சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

கடன் பிரச்சனை தீர
கடன் பிரச்சனை என்பது யாருக்கும் வரக் கூடாத பிரச்சனையாகும். ஆனால் இன்று கடன் இல்லாதவர்கள் மிக மிகக் குறைவு. கடனாக செலுத்த வேண்டிய தொகை சிறியதோ அல்லது பெரியதோ, எதுவாக இருந்தாலும் கடன் என்று வந்து விட்டால் அங்கு நிம்மதி போய் விடும்.

வாழ்க்கையில் நிம்மதி வர வேண்டும் என்றால் கடன் பிரச்சனை தீர வேண்டும். கடனாக வாங்கிய தொகையை திருப்பிக் கொடுத்து, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய செல்வ நிலை அல்லது பொருளாதார நிலை உயர வேண்டும்.

விநாயகரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் சங்கடஹர சதுர்த்தி.

இந்த நாளில் விநாயகரிடம் நம்முடைய கஷ்டம் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி வேண்டிக் கொண்டு, விரதம் இருந்து வழிபட்டால் அந்த குறையை நீக்கி, விநாயகர் நிச்சயம் நல்லது நடக்க அருள் செய்வார்.

வழிபாடு
பிப்ரவரி மாதத்தில் சங்கடஹர சதர்த்தி பிப்ரவரி 28ம் தேதி வருகிறது.

சங்கடஹர சதுர்த்தியே மிகவும் விசேஷமான நாள். அதிலும் விநாயகருக்கு உரிய புதன்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருவது இன்னும் சிறப்பானதாகும்.

கடன் பிரச்சனை அனைத்தும் நீங்கி, செல்வம் சேர வேண்டும், எப்போதும் குறைவில்லாத செல்வம் பெற வேண்டும் என்பவர்கள் இந்த நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.

கடன் தீர்க்கும் விநாயகர் மந்திரம்
சங்கஹர சதுர்த்தி விநாயகருக்குரிய, ” ஓம் கணேஷ ரிணாம் ஷிந்தி வரேணியம் ஹம் நமஹ பட் ” என்ற ரின்ஹர்தா கணேஷ மந்திரத்தை 11, 21 முதல் 108 முறை சொல்லுவதால் கடன் பிரச்சனை நீங்கும்.

இந்த மந்திரத்தை ஏதாவது ஒரு நல்ல நாளில் சொல்ல துவங்க வேண்டும்.

ஹரிதர ஜப மாலையை கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுவது இன்னும் நல்ல பலனை தரும். அதே போல் மஞ்சள் ஆடை அணிந்து இந்த மந்திரத்தை சொல்லுவது விரைவான பலனை தரும்.

Back to top button