இன்றைய ராசி பலன்

வக்ரமாகும் குரு! பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! – இன்றைய ராசிபலன்

வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் வக்ரமாகவுள்ளார்.

ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, மகிழ்ச்சி, திருமணம், செல்வம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்த குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். குரு பகவான் வக்ரமாவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் தெரியும்.

முக்கியமாக சில ராசிக்காரர்கள் குரு வக்ரமாவதால் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பாக எல்லா வேலையும் சரியாக நடக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு எல்லாம் நல்லபடியாக வெற்றி காணக்கூடிய நாள் இந்த நாள். இன்றைய தினம் முன்னோர்கள் தர்ப்பணத்தை சரியாக செய்து மன நிறைவு அடைவீர்கள். உங்களால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு செய்தால் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வீட்டிலும் வேலை பளு, வேலை செய்யும் இடத்திலும் வேலை பளு. கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருக்கும். கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடியாக நடக்கும். இன்றைய தினம் குலதெய்வத்திடம் வேண்டுதல் வைத்து வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் சுபகாரியத் தடை விலகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப நல்ல நாளா இருக்க போகுது. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு உண்டான அத்தனை காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை இருக்கும். விருந்தோம்பலால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உங்களால் முடிந்தவரை ஏழை குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கி தானம் கொடுப்பது இன்று முன்னோர்களின் ஆசிர்வாதத்தை நிறைவாக பெற்றுத்தரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். இன்றைய தினம் மகாளயா அமாவாசை வழிபாடு உங்கள் வீட்டில் சிறப்பாக நடைபெறும். உங்கள் கையால் வயது முதிர்ந்த இரண்டு தம்பதியருக்கு வயிறார சாப்பாடு போடுங்க நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசு ரொம்ப ரொம்ப லேசாக இருக்கும். பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்டது போல தோன்றும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உங்களுடைய பொறுப்புகளை எல்லாம் சரிவர செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்யுங்கள். யாசகம் கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த இரண்டு இட்லி வாங்கி தானம் கொடுத்தாலும் சிறப்பு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறிது நேரம் நல்ல ஓய்வு கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதிற்கு ஆறுதல் தரும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இன்றைய தினம் முடிவதற்குள் ஒரு ஆசிரமத்திற்கு சென்று அங்கு உள்ள குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த இனிப்பை வாங்கிக் கொடுப்பது ரொம்பவும் நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்ற திருப்தி நீங்கள் செய்த ஆன்மீக வழிபாட்டில் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய தினம் காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு பிறகு நீங்கள் சாதம் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்யலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். புதுசாக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சுப செலவுகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். முன்னோர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பாக நடக்கும். செருப்பு தைப்பவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு உங்கள் கையால் முடிந்த அன்னதானத்தை இன்று செய்வது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான சூழ்நிலை இருக்கும். இருப்பினும் முன்னோர்களது வழிபாட்டை செய்து முடித்து விடுவீர்கள். இன்றைய நாள் வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன திட்டுகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் அசதி வேலையை சரியாக செய்ய விடாது. யாருக்காவது இரண்டு பேருக்கு ஆவது உங்களுடைய கையால் இன்று அன்னதானம் செய்யவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் ஏதோ இருள் அடைந்தது போல இருக்கும். இன்று முன்னோர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் பெற்றதை மனதார உணர்வீர்கள். இதே சந்தோஷத்தோடு குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். ஆசிரமங்களுக்கு உங்கள் கையால் முடிந்த காணிக்கையை தானமாக கொடுக்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியாக செல்லும். முன்னோர்கள் வழிபாட்டை செய்ய முடியாமல் சிலருக்கு சிக்கல்கள் வரும். ஆனால் சிக்கல்களை சமாளித்து சரியான நேரத்தில் திதி தர்ப்பண காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அமாவாசை வழிபாட்டை இன்று நீங்கள் தவறவிடக்கூடாது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. உங்கள் கையால் பசு மாட்டிற்கு இன்று அகத்தி கீரை வாங்கிக் கொடுப்பது சிறப்பு.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். அமாவாசை வழிபாட்டை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளால் உங்களுடைய மனசு சந்தோஷப்படும். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது இன்று உங்களுக்கு நன்மையை தரும். உங்கள் கையால் பசு மாட்டிற்கு என்று வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

Back to top button