இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன்(08.02.2023)

ராசிபலன்

இன்று சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும் நாள் . புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். வணிகப்போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றிபெறுவீர்கள். சிவபெருமானை வழிபடு வது நன்று.

ராசிபலன்

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலீடுகளில் கவனம் தேவை. ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

ராசிபலன்

இன்று மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்பட்டு தீரும் . குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்று . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். பிற்பகலுக்கு மேல் வியாபாரம் சூடுபிடிக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ராசிபலன்

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ் தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கை உண்டாகும். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

ராசிபலன்

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக் கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய நிலுவைத் தொகை கைக்குவரும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

ராசிபலன்

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். முருகப் பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

ராசிபலன்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடு படவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்க ளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். லாபமும் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

ராசிபலன்

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

ராசிபலன்

குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பங்குதாரர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

ராசிபலன்

இன்று நினைத்த காரியத்தை எப்படியும் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரிகள் புதிய தொழில் முயற்சிகளை தற்போதைக்கு ஒத்திப்போடுவது நல்லது. நரசிம்மரை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

ராசிபலன்

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

Back to top button