இந்தியா

அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள 15 புதிய விதிமுறைகள்

அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
புதிய விதிமுறைகள்

*செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களது கணக்குகள் முடக்கப்படும்.

*2023-24 -ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் டி.சி.எஸ் (TCS) கட்டணங்களை 5% -லிருந்து 25% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

  • வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தால் 20% வரி செலுத்த வேண்டும். ரூ.7 லட்சத்திற்கு குறைவாக செலவு செய்தால் 5% செலுத்த வேண்டும்.

*வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சம் மேல் கடன் பெற்றால் 0.5% குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும். மருத்துவம் மற்றும் கல்வி செலவு ஏற்பட்டால் டி.சி.எஸ். 5% வசூல் செய்யப்படும்.

  • டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
  • பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்தவர்கள் தங்களுடைய கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இணைக்க வேண்டும்.
  • அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் அதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
  • தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த, காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மாற்றியமைத்த அட்டவணையை அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பின்பற்ற வேண்டும்.
  • அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் சொத்துக்கள் குறித்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
  • அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023 அமலுக்கு வரப்போகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  • மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Back to top button