இந்தியா

கேரளாவில் அடுத்தடுத்து 6 குண்டுவெடிப்பு- ஒருவர் பலி, 23 பேர் படுகாயம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு எற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கத்தில் மக்கள் திரண்டு இருந்த நேர்த்தில் குண்டு வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழிபாட்டு தலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கூடி இருந்து வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் அந்த அரங்கத்தில் இருந்துள்ளனர். தீடிரென்று 9 மணியளவில் அடுத்தடுத்து 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. குண்டு வெடித்த இடத்தில் இருந்த கதிரைகள் மற்றும் பல பொருட்கள் தீயில் கருகின.

இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை நடத்தியுள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் பலியாகியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த அனைவரும் கொச்சின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button