இந்தியா

இந்தியாவில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் ராஜ்கர் பகுதியில் நேற்றைய தினம் (05-12-2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது, ராஜ்கரில் உள்ள பிப்லியா ரசோதா கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலேயே குறித்த சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், குறித்த சிறுமியை மீட்கும் நடவடிக்கைகள் 9 மணித்தியாலங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்குள்ளாவதும் இந்தியாவில் தொடர் நிகழ்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button